Saturday, September 01, 2007

பிரிந்தோம்! சந்திப்போம்!!

ஆகஸ்ட் 25ம் தேதி, இரவு 9.00 மணிக்கு, பெங்களூருவிலிருந்து கோதண்டு அலைபேசியில் கூப்பிட்டான்..

" பங்காளி, விஷயம் தெரியுமா?''

" என்னடா?"

" எனக்கு ஒரு sms வந்தது! திருப்பூர்லருந்து வெங்கடேஷ் அனுப்பியிருந்தான்! நம்ம ஆண்டனி is no more!! "

" டேய்! என்னடா சொல்ற!!!! நம்ம ஆண்டனியா!! அந்த ஒரு பயதானே சுத்தமா touchயே இல்லாம இருந்ததான்.."

"ஆமா!!

"பாத்தியா! மூணு வருசம் ஒண்ணா இருந்திருக்கோம்..எவன் இருக்கான்,எவன் செத்தான் எதுவும் தெரியலை..கிட்டதட்ட பதினோரு வருஷம் ஆச்சு நாம காலேஜ் விட்டு வெளியே வந்து..கண்டிப்பா ஒரு get together ஏற்பாடு பண்ணணும்..ரொம்ப நாளா யோசனை இருக்கு"

"ஆமாண்டா, கண்டிப்பா ஏற்பாடு பண்றோம்"

-- எனக்கும் என் நண்பன் கோதண்டுக்கும் இடையேயான மேற்கண்ட உரையாடல்தான் எங்கள் கல்லூரி தோழர்களின் முதல் சந்திப்புக்கான ( சுமார் பதினோரு வருடங்கள் கழித்து) துவக்க புள்ளி.

இதன் பிறகு மிகுந்த வேலைப்பளுவிற்கு இடையிலும் ஒவ்வொருவராக தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம்.

ஒரு வழியாக 80/89 பேரை தொடர்பு கொண்டு, முகவரி பெற்று அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பியாயிற்று...

செப்டம்பர் 30ம் தேதி அனைவரும் சந்திக்கிறோம்..

I believe this is one of my achievements in my life...


பின்குறிப்பு:

எந்த ஆண்டனி இறந்து விட்டதாக கருதினோமோ, அவன் இப்பொழுது சிங்கப்பூரில் மென்பொருள் எழுதி கொண்டுள்ளான்.உண்மையில் இறந்தது, சிவில் துறையை சேர்ந்த ஆண்டணி..தெளிவில்லாத ஒரு அலைபேசி குறுஞ்செய்தியே இந்த குழப்பம் ஏற்படக் காரணம்.