ஹைய்யா!! எனது இடுகைகள் தமிழ்மணத்தில் தெரிகின்றன..உஸ்ஸ்ஸ் அப்பா, இன்னைக்கு ராத்திரி விளக்கை போட்டுக்கிட்டு பொட்டியை பிராண்டி வீட்ல அர்ச்சனை வாங்க வேண்டியதில்லை..
இலவசகொத்தனார் சார், நீங்கதான் ரிப்பன் வெட்டி நம்ம கடைல முதல்போணி(முதல் மறுமொழி)..ரொம்ப நாளைக்கு பிளாக்குல நிக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க..
ஆனா சும்மா சொல்லக்கூடாது..ஒரு வாரமா கஷ்டப்பட்டு,பதிவை எழுதி,போஸ்ட் பண்ணி, அது தமிழ்மணம்,தேன்கூடு எங்கேயுமே காணக்கிடைக்காம,ஏங்கிப்போய், திடீர்னு அது தமிழ்மணத்துல கண்ல தட்டுப்பட்டு, உடனே அதுல இலவசகொத்தனாரோட மறுமொழியையும் பாத்த உடனே அடிவயித்துல சும்மா ஜில்லுன்னு ஒரு பீலிங் வருது பாருங்க..என்னோட வீட்டுகாரம்மாவை பெண் பார்த்துட்டு வந்த அடுத்த நாள் தொலைபேசில அவங்க குரலை கேட்ட உடனே ஒரு ஜில் வந்ததுங்க..அதே பீலிங்ப்பா இப்ப..