Saturday, August 20, 2011

கவர்ந்த பதிவுகள்!

1. நரேனின் வடசென்னை குறித்தான பதிவுகள் - நிழலுகம்-1 & நிழலுகம்-2. பரபரவென திரில்லர் நடை எழுத்து.. நரேன் அதிகம் இப்பொழுது பதிவிடுவதில்லை என தெரிந்தாலும், அவ்வப்போது அவரது பதிவை புதிதாக ஏதாவது எழுதியிருக்கிறாரா என எட்டி பார்க்க வைப்பது இந்த கட்டுரைகளின் வெற்றி.. சுவராஸ்யமான பின்னூட்டங்களும் உண்டு.

2 . ஜெயமோகன் தனது மகன் அஜீதன் குறித்து பகிர்ந்த தேர்வு. தகப்பன்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை

3.R.P.ராஜநாயகம் அவர்களின் எல்லா பதிவுகளுமே மிகவும் ரசிக்கக்கூடியவை.. ஒரு தகப்பனாக Child is the father of the man என்றுமே மனதுக்கு நெருக்கமானது.

4. இளவஞ்சி தனது வழக்கமான இயல்பான எழுத்தில் பகிர்ந்த எமிலி என்றொரு தோழி. படித்து கொண்டே வரும் போது குபுக்கென்று ஏதோவொன்று உள்ளே உடையும்.

5. ஜெயமோகன் வாழ்வின் ஜென் தருணத்தை அழகாக சொல்லும் வாழும் கணங்கள். தெரிந்து கொள்ளுதல் மற்றும் அறிதல் பற்றிய கட்டுரை, பின்பகுதி சிறிது குழப்பினாலும், ஊன்றி வாசித்தால் மிகச் சிறந்த கட்டுரை

No comments:

Post a Comment