Thursday, October 18, 2007

பக்கத்து சீட்ல சனி!! ( தொடர்ச்சி)

ஒருவழியா பத்தாயிரம் ரூபாயோட பங்குசந்தைல
கால்வைச்சேன்.( பிளாஷ்பேக் இங்கே)

என்னோட புரோக்கர் மெயில்ல அனுப்பற
பரிந்துரைல இருந்து ஒரு ஸ்டாக்கை செலக்ட்
பண்ணி வாங்கினேன்.அந்த ஸ்டாக்கை நான்
வாங்கின அப்புறம், என் அளவுக்கு
NSE வெப்சைட்டை ரீபிரெஷ் பண்ணவங்க யாரும்
இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.நிமிஷத்துக்கு
ஒரு தடவை என் ஷேர் எவ்வளவு ஏறி இருக்குன்னு
பார்த்துக்கிட்டே இருப்பேன்.அது என்னமோ தெரியலை,
10000+ ல இருந்த சென்செக்ஸ் 12000+ ஆனாலும் என்
ஷேர் மட்டும் நாட்டாமை மாதிரியே( அதாங்க என்னைக்கும்
ஒரே சொல்லுன்னு சொல்வாருல்ல..அதே மாதிரி
நம்ம ஷேரும் என்னைக்கும் ஒரே ரேட்டுதான்) இருந்தது.

நாம டென்ஷனாகி ஒரு நூறு ரூபா லாபத்துல
வித்துட்டு வெளிய வந்தாச்சு..வித்ததுக்கு அப்புறம்
contract note பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது
லாபம் நூறு ரூபா இல்ல வெறும் பதினாலு ரூபான்னு.

சரி இதெல்லாம் ஒரு அனுபவம் மனசை தளர
விடாதன்னு பக்கத்து சீட்ல இருந்து சனி பகவான்
குரல் கொடுத்தார்.அப்பதான் உள்ளே இருந்து சிங்கம்
குரல் விட்டாரு.நமக்கு இதெல்லாம் சரிப்படாதுப்பா..
வா..day trading பண்ணுவோம்னாரு..இது நடக்கறது..ஏப்ரல் 2005.
சரின்னு புரோக்கர் கொடுத்த மெயில்ல ரிதமிங்கா
இருந்த ஒரு ஷேரை செலக்ட் பண்ணி ஒரு டிரேட் பண்ணதுல
ஒரே நாள்ல ஏழாயிரம் லாபம்.உள்ளேர்ந்து "அதான்
சொன்னோம்ல" அப்படின்னு குரல் வந்தது.

இங்க ஆரம்பிச்சதுங்க வினை..அதுக்கப்புறம் கண்ணு
மண்ணு தெரியாம day trading தான்..சம்பந்தமில்லாம ஒரு
கம்பெனியை வாங்கி வைச்சுக்கிட்டு நாள் பூரா
பார்த்துக்கிட்டே இருந்தா,அது என்னமோ நாம
வாங்கறதுக்கினே காத்துக்கிட்டு இருந்த மாதிரி,
ரிவர்ஸ் கியர்ல அப்படி பறக்கும்..ஆனா இப்ப நினைச்சு பார்க்கிறேன்,நாமல்லாம் வீரபரம்பரைங்க,,பின்ன அதெல்லாம்
பார்த்துக்கிட்டு அசராம இருந்துருக்கோம்ல.

இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தப்ப லாபமும் இருந்தது,
நஷ்டமும் இருந்தது.ஆனா இன்னைக்கு வரைக்கும்
நஷ்டம்தான் ஞாபகத்துல இருக்குது.அப்படின்னா,லாபம்
எவ்வளவுன்னு சொல்ல வேண்டியதில்லை.

எங்கேயோ,எதையோ படிச்சதுக்கப்புறம்,historical price movement
பார்த்து ஷேர் வாங்குவோம்னு முடிவு பண்ணிணேன்.இப்பயும்,
நம்ம புரோக்கர் கொடுத்த பரிந்துரைல இருந்து ஒரு
ஸ்டாக்கை செலக்ட் பண்ணோம்.ஏன்னா,Rs.325 இருந்த
ஸ்டாக்குக்கு Rs.450 டார்கெட் கொடுத்து இருந்தாங்க.
2006,மே-10ம் தேதின்னு நினைக்கிறேன்..இந்த ஷேரை
வாங்கினேன்.எத்தனை மணிக்கு தெரியுமா? 3.20க்கு.எப்படி
வாங்கினேன் தெரியுமா? மார்ஜின் டிரேட்ல.ஏன் தெரியுமா?
நாலு நாளா அந்த ஷேர் ரொம்ப ஊசாலட்டத்துல ஏறுறதும்,
இறங்கறதுமா இருந்தது.நம்ம ஐடியா என்னன்னா,நாம
முதல் நாள் குறைஞ்ச விலைக்கு வாங்கி, ரெண்டு நாள்
கழிச்சு விலை ஏறியதுக்கப்புறம் வித்துடாலாம்னு.

நான் Rs.324க்கு அந்த ஷேரை வாங்கிட்டு, ரெண்டு நாளா
அந்த பக்கமே எட்டி பார்க்கலை.அப்புறம் பார்த்தா, நம்ம
ஷேர் விலை Rs.280க்கு இருந்தது.அப்பவும் நமக்கு நினைப்பு
என்னன்னா,Rs.380வரைக்கும் ஏற்கனவே போயிருந்த ஷேர்
நம்மளை மோசம் பண்ணாது,கண்டிப்பா ரெண்டு நாள்ல
சரியா போயிரும்னு.மே-18,2006- நம்ம சந்தை அடிச்சது
பாருங்க ஒரு அந்தர் பல்டி( சென்செக்ஸ் சுமார் 800
புள்ளிகளை இழந்தது).சரி,நம்ம சூப்பர் பெர்பார்மர் எந்த
நிலைமைல இருக்காருன்னு பார்த்தா,எனக்கே
சந்தேகமாயிருச்சு,நம்ம ஷேரோட ரேட்தானா இதுன்னு.பின்ன,
நம்மாளு,Rs.324 ல இருந்து Rs.220க்கு போயிட்டாருல்ல.
அன்னைக்கு நம்ம காதுல புகை வந்த மாதிரி,என்னைக்குமே
வந்ததுல்லைங்க.நமக்கு நம்ம பாசக்கார ஷேரை விட
மனசில்லாததால,வீட்டம்மாகிட்டே கெஞ்சி கூத்தாடி டப்பு
ரெடி பண்ணி டெலிவரி எடுத்துட்டேன்.

நம்ம சிங்கம் உள்ளேர்ந்து,கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க சொன்னாரு.
அப்புறம் ஒரு ரெண்டு மாசம் கழிச்சு மறுபடியும்,day trading
பண்ண ஆரம்பிச்சோம்.பழைய கதைதான்..ஆனா என்ன இப்ப
கொஞ்சம் large cap and most trading counters ல மட்டும்.பெரிசா
லாபமும் இல்லை,நஷ்டமும் இல்லைங்கற நிலைமை.ஆனா,
சின்ன நஷ்டம் கூட நிறைய யோசிக்க வைச்சுது.

அதுக்கப்புறம்தான் நம்ம சனி பகவானை பேக் பண்ணி அனுப்பி வைச்சுட்டு,வாலை சுருட்டிக்கிட்டு, just மார்க்கெட்ல என்ன நடக்குது,
எந்த ஷேர் ஏறுது,ஏன் ஏறுது.எப்ப வாங்கனும்,எப்ப விக்கனும்,இன்னும் நிறைய கவனிக்க ஆரம்பிச்சேன்.கிட்டதட்ட இன்னைக்கு வரை அதான் செஞ்சுகிட்டு இருக்கேன்,ஒரு சில உருப்படியான investment மட்டும்
பண்ணி இருக்கேன்.


சரி..இப்ப வேலு நாயக்கர் சொல்ற நாலு நல்ல விஷயத்தை
கேளுங்க ( இது கண்டிப்பா அறிவுரை கிடையாது ஆனா
என்னோட அனுபவம்).

1.ஷேர் மார்க்கெட் கண்டிப்பாக சூதாட்டக்களம் கிடையாது.நீங்கள்
எந்த அளவு விஷயம் தெரிந்து வைத்துள்ளீர்களோ அந்தளவு
நஷ்டம் தவிர்க்கலாம்.லாபமும் பார்க்கலாம்

2.லாபம் பார்க்க,அவசரம் வேண்டாம்.பொறுமை தேவை.அதிக கால முதலீடுகள் பல சமயங்களில் நல்ல வருமானம் தரும்.
கீழே,நான் சென்ற வருடம் day trading பண்ண சில ஷேர்களோட அன்றைய விலை மற்றும் இன்றைய விலைகளை கொடுத்துள்ளேன்.

IFCI
அன்றைய விலை- Rs.18.00
இன்றைய விலை - Rs.80.00

BHARTI AIRTEL
அன்றைய விலை - Rs.350.00
இன்றைய விலை - Rs.1000.00

RELIANCE COMMUNICATIONS
அன்றைய விலை - Rs.250.00
இன்றைய விலை - Rs.750.00

3.முக்கியமாக, day trading மற்றும் short term ல் ஈடுபடும் போது
அந்த counter பற்றிய அனைத்து தகவல்களும் விரல் நுனியில்
வைத்து இருப்பது நல்லது.முடிந்த அளவு,ஊடகங்களை பயன்
படுத்துங்கள்.ஒரு நாள்,நான் 600 ரூபாய்க்கு ஒரு ஷேர்
வாங்கினேன்.சில நிமிடங்களில்,அது 10% அதிக விலைக்கு
போனவுடன் விற்றுவிட்டேன்.பிறகுதான் தெரிந்தது, அந்த
கம்பெனிக்கு 1 பில்லியன் டாலர்க்கு ஒரு ஆர்டர் கிடைத்த
செய்தி வெளியானதால்தான்,ஸ்டாக் எகிற ஆரம்பித்து
இருக்கிறது.நான் விற்ற இரண்டு வாரத்திலேயே அந்த ஸ்டாக்,
1700 ரூபாய்க்கு போய் என்னை பார்த்து நக்கலாக சிரித்தது.So,
UPDATION is VERY IMP.

4.எல்லாம் தெரிஞ்ச டை கட்டிய கோயிஞ்சாமிகள் மற்றும்
ஊடகங்களில் கிடைக்கும் tips ஆகியவற்றை அப்படியே எடுத்துக்
கொள்ள வேண்டாம்.உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை கொண்டு
வடிகட்டி ஸ்டாக்களை செலக்ட் செய்யவும்.

5.உங்களுக்கு என ஒரு வழிமுறை வைத்துக்கொள்வது நல்லது,
எவ்வளவு லாபம் மற்றும் நஷ்டம் பார்த்தவுடன் வெளியேறுவது
என்பதை முன்பே முடிவு செய்து அதை அப்படியே பின்பற்றுவது
சாலச்சிறந்தது..

நாம பட்ட அடிக்கு,ஒரு புக்கே எழுதலாம்.ஆனா போதும்
நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன்..நான் இன்னுமே
பங்குசந்தைல ஒரு அமெச்சூர்தான்..அதனால இந்த பதிவு
அறிவுரை சொல்றதுக்காக இல்லை..நம்ம கதையை ஊருக்கு
சொன்னா,நாலு பேருக்கு உதவுமேங்கற எண்ணம்தான்..

நம்ம பங்குச்சந்தை குப்புற விழுந்துக்கிட்டு இருக்கிற இந்த
நேரத்துல,இந்த பதிவு பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்.
சென்செக்ஸ் target 20000ங்கறது போய் இப்ப 25000,40000ன்னு பேச
ஆரம்பிச்சுருக்கிற இந்த நேரத்துல,நல்லா தெரிஞ்சு,புரிஞ்சு
நிறைய பணம் பண்ணுங்க மக்களே..நம்மளை மாதிரி
இருந்துறாதிங்க!!!

எழுத ஆரம்பிச்சப்ப இருந்த திருப்தி,முடிக்கறப்ப இல்லை..
ஏன்னு தெரியலை..வந்தனம்.

Wednesday, October 17, 2007

சந்தோஷம்!துக்கம்!! ஒரே நாளில்..

நான் முதன் முதலில் சிரமப்பட்டு எழுதிய நீண்ட பதிவு இது( எனக்கு இது நீண்ட பதிவுதான்பா!).இந்த பதிவு எழுதிய போது என் வலைப்பதிவு தமிழ்மணத்திலோ,தேன்கூடிலோ இணைக்கப்பட வில்லை.எனவே மீள்பதிகிறேன்( ஒரே வாரத்துல மீள்பதிவு பண்ண முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்)

செப்டம்பர் 30' 2007 - என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது.இரு நிகழ்ச்சிகள்,ஒன்று மிக சந்தோஷமான நிகழ்வு, மற்றொன்று துயரமானது.இந்த இரு சம்பவங்களுமே எனக்களித்த அனுபவம் ஏராளம்.

துயரமான நிகழ்வு:

நீங்கள் இருபது வருடமாக வசித்து வரும் ஒரு இடத்தில் உள்ள காலி இடத்தில்,திடீரென ஒரு நாள் காலை, ஒரு குடிசை முளைக்கிறது.ஒரு கும்பல் உள்ளே உட்கார்ந்து இருக்கிறது.நீங்கள் விசாரிக்கும் பொழுது, அந்த இடத்தை வாங்க ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளேன் என்கிறான் ஒருவன்.உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?. இதுதான் எனக்கு நிகழ்ந்தது. அக்டோபர் 1ம் தேதி காலை எங்கள் இடத்தை ஒருவன் ஆக்கிரமிப்பு செய்தான்.சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சமூக விதிகளை மீறாமல்,வருமான வரி ஒழுங்காக அரசுக்கு செலுத்தி வாழ்க்கையை நடத்தும் மத்திய தர வர்க்க சாதாரண குடிமகனான எனக்கு இச்சம்பவத்தின் வீச்சு புரிபட சில மணித்துளிகளானது.அடாவடி முறையில் இச்சம்பவத்தை எதிர்கொள்வதை விட, நிதானமான முறையில் எதிர்கொள்வது என முடிவெடுத்தேன்.பதற்றத்தை தவிர்த்து விட்டு காவல்நிலையத்தில் புகார் செய்தோம்.சில நல்ல உள்ளங்களின் உதவியுடன், நான்கு நாட்கள் அலைக்களிப்புக்கு மற்றும் சில பத்தாயிரங்கள் விரயத்திற்க்கு பிறகு, இடம் எங்கள் வசமானது.இச்சம்பவம் எனக்கு உணரவைத்த ஒரே விஷயம். " வல்லவன் வகுத்ததே வாய்க்கால்".நில ஆக்கிரமிப்பு செய்தவன் மீது பல வழக்குகள் ஏற்கனவே காவல் நிலையத்தில் உள்ளது. இருந்தும் எனக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை.காரணம்,அவன் அரசியல் ரீதியில் செல்வாக்கு உள்ளவன் நாம் என்னதான் படித்திருந்தாலும்,நிர்வாக முறையில் சிறந்து விளங்கினாலும், இம்மாதிரி பிரச்சினைகளில், நீங்கள் காவல் நிலைய, அரசியல் குழுக்களின் நெளிவு சுளிவு விளையாட்டுளில் வளைந்து போய்த்தான் பிரச்னையை முடித்தாக வேண்டும்.நானும் என்னால் முடிந்த அழுத்தத்தை மேல் மட்ட அளவில் இருந்து கொடுத்த பிறகுதான் பிரச்சினையில் இருந்து வெளிவர முடிந்தது.

இம்மாதிரி தருணங்கள்தான், நாம் நமக்குள்ளே வகுத்து கொண்டுள்ள நேர்மை,வாக்கு தவறாமை, நாணயம் போன்றவற்றை கேலிப்பொருளாக்குகின்றன. ஆனால் இன்னும் எனக்கு நம்பிக்கை குறையவில்லை.

மகிழ்ச்சியான நிகழ்வு:

நீங்கள் கல்லூரியை விட்டு வெளிவந்த பின், சுமார் பதினோரு வருடங்கள் கழித்து, உங்கள் வகுப்பு தோழர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சந்த்தித்தால் அதுவும், உங்கள் துறைத்தலைவர் மற்றும் ஆசிரியர்களும் உடன் இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அந்த நிகழ்வை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தவர் நீங்கள் என்னும் பொழுது, இதை விட சந்தோஷம் தரும் நிகழ்வு ஏதும் நிச்சயம் உங்களுக்கு அமையாது!! நான் இந்த மனநிலையில்தான் இருந்தேன், செப்டம்பர் 30ம் தேதி அன்று!.( மேலே குறிப்பிட்ட சம்பவத்திற்கு முதல் நாள்). நானும் பெங்களூரிவில் உள்ள என் நண்பனும் இருமாதங்களாக அனைவரையும் தொடர்பு கொண்டு, ஒருங்கிணைத்து, செப்டம்பர் 30ம் தேதி, முன்னாள் மாணவர் சந்திப்பை நடத்தினோம். அறுபது மாணவர்கள் மற்றும் எங்களது மூன்று ஆசிரியர்களுடன் கழித்த அந்த நாள் மிக இனிமையான மறக்க முடியாத அனுபவம்.வகுப்பறையில் செய்த அதே அலப்பறையுடன், நிகழ்ச்சி நடந்தது. அனைவரையும் பேசவைத்தோம்.

சிங்கப்பூர்,மலேசியாவில் இருந்தவர்களையும் விடாமல், தொலைபேசி ஸீபிக்கர் மூலம் உரையாட வைத்தோம். எண்ணற்ற ஆச்சர்யங்கள்!

1.அமைதியே உருவான நண்பன், இயற்கை உரத்தயாரிப்பின் மூலம், தி இந்து கட்டுரையில் இடம் பெற்றது.
2.வகுப்பின் முதல் மாணவன், குடும்ப சூழல் காரணமாக, அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியனானது.
3.மிக சராசரியென அறியப்பட்ட நண்பன், இருநூறு பேர் மற்றும் இருநூறு கோடி விற்றுமுதல் கொண்ட அலுவலககிளையின் மேலாளராக இருப்பது. 4.டெக்ஸ்டைல்ஸ் படித்து விட்டு, சிங்கப்பூரில் மென்பொருள் எழுதும் நண்பன் 5.டெக்ஸ்டைல்ஸ் படித்து விட்டு,மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணிபுரியும் நண்பன்
6.இன்னும் வேலைதேடிக்கொண்டிருக்கும் நண்பன்
7.எங்கள் வரவேற்பினால் கண்கலங்கிய எங்கள் துறைத்தலைவர் 8.எங்களை விட இளமையாக இருந்த எங்கள் ஆசிரியர்கள்
9.கீரியும்,பாம்புமாக இருந்த நண்பர்கள் கொஞ்சி குலாவியது

இன்னும் பல ஆச்சர்யங்கள்!!வீடு,அலுவல் எனஅனைத்தையும் மறந்து சந்தோஷமாக இருந்த நாளது..

இச்சந்திப்பிற்கு பிறகு தொடர்புகள் புதுப்பிக்கபடுகின்றன..மெயில்பாக்ஸ்கள் நிரம்பி வழிகின்றன..நிறைய குறுஞ்செய்திகள்,கைப்பேசியில்..இச்சந்திப்பை ஒருங்கிணைத்தவன் என்ற முறையில், அளப்பறியா மகிழ்ச்சி எனக்கு..

மீண்டும் 2010ல் சந்திப்பதாக முடிவு செய்துள்ளோம்.

பக்கத்து சீட்ல சனி!

ஆகா..இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா..பதிவெழுதறதை
பத்திதாங்க சொல்றேன்..சரி நாமளும் வேலு நாயக்கர் மாதிரி
நாலு பேருக்கு நல்லது சொல்வோம்னு பார்த்தா,ஒரு வாரமா
ஒண்ணுமே தோண மாட்டேங்குது.இதை பத்தியே யோசிச்சுகிட்டு
இருக்கறதால வீட்ல ஏங்க தீடீர்னு கஜினி மாதிரி ஆகிட்டீங்கன்னு
வேற கவலை பட ஆரம்பிச்சுட்டாங்க.

ரொம்ப யோசிச்சு,கடைசியா ஒரு அப்பாவி(வேற யாரு நாமதான்!)
பங்குசந்தையில பட்ட அனுபவங்களை அதாவது நொந்து நூலான,
அந்து அவியலாகி நூடுல்ஸான கதையை சொல்வோம்னு முடிவு பண்ணியாச்சு.
இன்னைக்கு இருக்கிற மேடு பள்ளமான பங்குசந்தை ஓட்டத்துல,
என் கதை பொருத்தமா இருக்கும்னு தோணுது.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அதாவது அக்டோபர் 2005,நம்ம
மும்பை தலைமை அதிகாரியோட மதிய உணவுல இருந்தப்ப
சேமிப்பெல்லாம் எங்க எப்படி பண்றீங்கன்னு கேட்டாரு.
அப்படியெல்லாம் ஒரு கெட்ட பழக்கமும் இல்லைன்னு சொல்ல,
அவர் நம்மளை ஏதோ அவர் பேண்ட்ல நம்ம சூப்பை ஊத்துன
மாதிரி ஒரு பார்வை பார்த்துட்டு,உருப்படியா ஏதாவது பரஸ்பர
நிதில பணம் போட்டு வைக்க அறிவுரை சொன்னாரு.நாம அந்த
வார்த்தையை நிறைய தடவை விளம்பரங்கள்ல கேள்விப்
பட்டிருந்தாலும்,அதெல்லாம் ஏதோ படிச்சவங்க விவகாரம்னு
விலகி போனதால,அவரையே பரஸ்பர நிதி பத்தி விளக்க
சொன்னேன்..அவரும் சூப் ஆர்டர் பண்ணதுல இருந்து பில்
செட்டில் பண்ற வரைக்கும் விளக்கு விளக்குன்னு விளக்குனாலும்
நம்ம கற்பூர புத்திக்கு ஒண்ணே ஒண்ணுதான் விளங்குச்சு.பரஸ்பர
நிதி,பங்கு சந்தைல நிறைய பணம் முதலீடு செஞ்சு
சம்பாதிக்கறாங்க.அப்பத்தான் நமக்கு பல்பு எரிஞ்சு,நாமளே ஏன்
பங்குச்சந்தைல முதலீடு செய்ய கூடாதுன்னு உள்ளே இருந்து
சிங்கம் குரல் கொடுத்தது(சனி பகவான் நம்ம பக்கத்துல வந்து
பக்காவா செட்டில் ஆனது அப்பதான்னு நினைக்கிறேன்).அன்னைக்கு
தேதிக்கு நமக்கு ஷேர்மார்க்கெட் அப்படிங்கற வார்த்தைக்கு
ஸ்பெல்லிங் தவிர வேற எதுவுமே பங்குச்சந்தை பத்தி தெரியாது.
தப்பி தவறி சேனல் மாத்தறப்போ CNBC அல்லது NDTV profit
பார்த்தால் கூட டெலிஷாப்பிங் புரோகிராம் பார்த்தா எப்படி
எகிறுவோனோ அதே ரேஞ்சுல சேனல் மாறிடுவேன்.

பங்குச்சந்தை பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சப்போ பண்ண அலப்பறை
இருக்கு பாருங்க..சிட்டி பேங்க் சீப் மாதிரி காலைல எக்கானமிக்
டைம்ஸ்லதான் கண்முழிக்கறது.காலைல டிபன்
"ndtv பிரேக் பாஸ்ட் வித் பிராபிட்"உடன்தான்.டின்னர்,
"CNBC இந்தியா பிசினஸ் அவர் பார்த்துக்கிட்டேதான்னு
(வீட்ல கோலங்கள் போச்சேங்கற முறைப்பையெல்லாம் மீறிதான்)
நம்ம லைப்பே மாறிடுச்சு.கொஞ்சம் கொஞ்சம் அப்பதான் நமக்கு
நாட்டுல தொழில் துறைல என்ன நடக்குது,பெரிய மனுசங்க யாரு,
ஏர்டெல்,பஜாஜ் இன்னும் பிற கம்பெனி ஓனர்லாம் யாரு
அப்படின்னு விளஙக ஆரம்பிச்சது.அப்பதான் எனக்கு,வள்ளியப்பன்
அவர்கள் எழுதின "அள்ள அள்ள பணம்" படிக்க வாய்ப்பு கிடைச்சது.
ஒரே சிட்டிங்கில் படிச்ச சில புத்தகங்கள்ல அதுவும் ஒண்ணு.அப்புறம்
கொஞ்சம் விஷயம் தெளிவாச்சு.இதெல்லாம் நடக்கிறப்போ
பிப்ரவரி 2006.கை பரபரக்க ஆரம்பிச்சுருச்சு.அதுவுமில்லாம,
அக்டோபர் 2005ல 8000+ ல இருந்த சென்செக்ஸ் பிப்ரவரி 2006ல
10000+ தாண்டின உடனே உள்ளே இருந்த சிங்கம் வேற ஏதாவது
பண்ண சொல்லி உரும ஆரம்பிச்சுட்டாரு.

சரி களம் இறங்கலாம்னு முடிவு பண்ணி,பத்தாயிரம் ரூபாயோட
நம்ம சனி பகவான் துணையோட பங்குசந்தைல கால் வைச்சேன்..

கொஞ்சம் பொறுங்களேன் வந்துடறேன்( ஆமா பெரிய சுஜாதா,
சஸ்பென்ஸ் வைக்கிறேன்னு நினைக்காதீங்க..உண்மையிலயே
தமிங்கலீஷ் டைப் ரைட்டிங்ல விரல் வலிக்குதுங்க).

Saturday, October 13, 2007

ஹைய்யா!! ஜில்லுன்னு ஒரு பீலிங்

ஹைய்யா!! எனது இடுகைகள் தமிழ்மணத்தில் தெரிகின்றன..உஸ்ஸ்ஸ் அப்பா, இன்னைக்கு ராத்திரி விளக்கை போட்டுக்கிட்டு பொட்டியை பிராண்டி வீட்ல அர்ச்சனை வாங்க வேண்டியதில்லை..

இலவசகொத்தனார் சார், நீங்கதான் ரிப்பன் வெட்டி நம்ம கடைல முதல்போணி(முதல் மறுமொழி)..ரொம்ப நாளைக்கு பிளாக்குல நிக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க..

ஆனா சும்மா சொல்லக்கூடாது..ஒரு வாரமா கஷ்டப்பட்டு,பதிவை எழுதி,போஸ்ட் பண்ணி, அது தமிழ்மணம்,தேன்கூடு எங்கேயுமே காணக்கிடைக்காம,ஏங்கிப்போய், திடீர்னு அது தமிழ்மணத்துல கண்ல தட்டுப்பட்டு, உடனே அதுல இலவசகொத்தனாரோட மறுமொழியையும் பாத்த உடனே அடிவயித்துல சும்மா ஜில்லுன்னு ஒரு பீலிங் வருது பாருங்க..என்னோட வீட்டுகாரம்மாவை பெண் பார்த்துட்டு வந்த அடுத்த நாள் தொலைபேசில அவங்க குரலை கேட்ட உடனே ஒரு ஜில் வந்ததுங்க..அதே பீலிங்ப்பா இப்ப..

சோதனை மேல் சோதனை

நான் இடுகைகளை இருதினங்களாக தமிழ்மணத்தில் எதிர்பார்க்கிறேன்..ஆனால் காணவில்லை.
தேன்கூட்டிலும்,கண்ணுக்கெட்டியது வரை என் பதிவுகளை காணவில்லை..யாராவது உதவுங்களேன்..

தமிழ்மணத்தில் கூறியுள்ளபடி பதிவுப்பட்டையை இணைத்தும், என் பதிவுகளில் அது காணவில்லை

Thursday, October 11, 2007

பில்கேட்ஸ்க்கு ஆப்பு!!

அம்பானி பிரதர்ஸ் சரித்திரம் படைக்கிறார்கள்.பங்குச்சந்தை பாய்ச்சல் காரணமாக முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் நிறுவன பங்குகள் மேல்நோக்கி பறந்த வண்ணம் உள்ளன.செவ்வாய்க்கிழமை முடிந்த பங்குச்சந்தை நிலவரப்படி, அம்பானி சகோதரர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் மூன்று இலட்சத்து இருபத்து நான்கு கோடிகள் என கணக்கிடப்பட்டுள்ளது ( விரல் விட்டு கணக்கு பண்ணாதிங்க! ரிஸ்க்கு!!). இது உலக மகா பணக்காரர்கள் பில்கேட்ஸ் மற்றும் கார்லோஸ் ஸிலிம்மின் சொத்து மதிப்பை விட அதிகம்.மேலும் இது நம் நாட்டின் GDP ல் சுமார் எட்டு சதவீதமாகும்.

மேலும் முகேஷ் அம்பானி, இந்தியாவின் டாப் பணக்காரரான லஷ்மி மிட்டலை(வெளிநாட்டு வாழ் இந்தியர்)தொட்டு விடும் நிலையில் உள்ளார்(பங்குச்சந்தை கை கொடுப்போம் என நம்புவோமாக!).

முகேஷின் தற்போதைய சொத்து மதிப்பு - ஒரு இலட்சத்து எண்பத்து நான்கு கோடிகள்

அனிலின் தற்போதைய சொத்து மதிப்பு - ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடிகள்

வாழ்க நம் பங்குச்சந்தை!!

தகவல்: எக்கானமிக் டைம்ஸ்

Wednesday, October 10, 2007

சந்தோஷம்!துக்கம்!! ஒரே நாளில்!!!!

செப்டம்பர் 30' 2007 - என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது.இரு நிகழ்ச்சிகள்,ஒன்று மிக சந்தோஷமான நிகழ்வு, மற்றொன்று துயரமானது.இந்த இரு சம்பவங்களுமே எனக்களித்த அனுபவம் ஏராளம்.

துயரமான நிகழ்வு:

நீங்கள் இருபது வருடமாக வசித்து வரும் ஒரு இடத்தில் உள்ள காலி இடத்தில்,திடீரென ஒரு நாள் காலை, ஒரு குடிசை முளைக்கிறது.ஒரு கும்பல்
உள்ளே உட்கார்ந்து இருக்கிறது.நீங்கள் விசாரிக்கும் பொழுது, அந்த இடத்தை வாங்க ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளேன் என்கிறான் ஒருவன்.உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?. இதுதான் எனக்கு நிகழ்ந்தது. அக்டோபர் 1ம் தேதி காலை எங்கள் இடத்தை ஒருவன் ஆக்கிரமிப்பு செய்தான்.சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சமூக விதிகளை மீறாமல்,வருமான வரி ஒழுங்காக அரசுக்கு செலுத்தி வாழ்க்கையை நடத்தும் மத்திய தர வர்க்க சாதாரண குடிமகனான எனக்கு இச்சம்பவத்தின் வீச்சு புரிபட சில மணித்துளிகளானது.அடாவடி முறையில் இச்சம்பவத்தை எதிர்கொள்வதை விட, நிதானமான முறையில் எதிர்கொள்வது என முடிவெடுத்தேன்.பதற்றத்தை தவிர்த்து விட்டு காவல்நிலையத்தில் புகார் செய்தோம்.சில நல்ல உள்ளங்களின் உதவியுடன், நான்கு நாட்கள் அலைக்களிப்புக்கு மற்றும் சில பத்தாயிரங்கள் விரயத்திற்க்கு பிறகு, இடம் எங்கள் வசமானது.இச்சம்பவம் எனக்கு உணரவைத்த ஒரே விஷயம். " வல்லவன் வகுத்ததே வாய்க்கால்".நில ஆக்கிரமிப்பு செய்தவன் மீது பல வழக்குகள் ஏற்கனவே காவல் நிலையத்தில் உள்ளது. இருந்தும் எனக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை.காரணம்,அவன் அரசியல் ரீதியில் செல்வாக்கு உள்ளவன்

நாம் என்னதான் படித்திருந்தாலும்,நிர்வாக முறையில் சிறந்து விளங்கினாலும், இம்மாதிரி பிரச்சினைகளில், நீங்கள் காவல் நிலைய, அரசியல் குழுக்களின் நெளிவு சுளிவு விளையாட்டுளில் வளைந்து போய்த்தான் பிரச்னையை முடித்தாக வேண்டும்.நானும் என்னால் முடிந்த அழுத்தத்தை மேல் மட்ட அளவில் இருந்து கொடுத்த பிறகுதான் பிரச்சினையில் இருந்து வெளிவர முடிந்தது.இம்மாதிரி தருணங்கள்தான், நாம் நமக்குள்ளே வகுத்து கொண்டுள்ள நேர்மை,வாக்கு தவறாமை, நாணயம் போன்றவற்றை கேலிப்பொருளாக்குகின்றன. ஆனால் இன்னும் எனக்கு நம்பிக்கை குறையவில்லை.

மகிழ்ச்சியான நிகழ்வு:

நீங்கள் கல்லூரியை விட்டு வெளிவந்த பின், சுமார் பதினோரு வருடங்கள் கழித்து, உங்கள் வகுப்பு தோழர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சந்த்தித்தால் அதுவும், உங்கள் துறைத்தலைவர் மற்றும் ஆசிரியர்களும் உடன் இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அந்த நிகழ்வை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தவர் நீங்கள் என்னும் பொழுது, இதை விட சந்தோஷம் தரும் நிகழ்வு ஏதும் நிச்சயம் உங்களுக்கு அமையாது!! நான் இந்த மனநிலையில்தான் இருந்தேன், செப்டம்பர் 30ம் தேதி அன்று!.( மேலே குறிப்பிட்ட சம்பவத்திற்கு முதல் நாள்).

நானும் பெங்களூரிவில் உள்ள என் நண்பனும் இருமாதங்களாக அனைவரையும் தொடர்பு கொண்டு, ஒருங்கிணைத்து, செப்டம்பர் 30ம் தேதி, முன்னாள் மாணவர் சந்திப்பை நடத்தினோம். அறுபது மாணவர்கள் மற்றும் எங்களது மூன்று ஆசிரியர்களுடன் கழித்த அந்த நாள் மிக இனிமையான மறக்க முடியாத அனுபவம்.வகுப்பறையில் செய்த அதே அல்ப்பறையுடன், நிகழ்ச்சி நடந்தது. அனைவரையும் பேசவைத்தோம்.சிங்கப்பூர்,மலேசியாவில் இருந்தவர்களையும் விடாமல், தொலைபேசி ஸீபிக்கர் மூலம் உரையாட வைத்தோம்.

எண்ணற்ற ஆச்சர்யங்கள்!

1.அமைதியே உருவான நண்பன், இயற்கை உரத்தயாரிப்பின் மூலம், தி இந்து கட்டுரையில் இடம் பெற்றது.
2.வகுப்பின் முதல் மாணவன், குடும்ப சூழல் காரணமாக, அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியனானது.
3.மிக சராசரியென அறியப்பட்ட நண்பன், இருநூறு பேர் மற்றும் இருநூறு கோடி விற்றுமுதல் கொண்ட அலுவலககிளையின் மேலாளராக இருப்பது.
4.டெக்ஸ்டைல்ஸ் படித்து விட்டு, சிங்கப்பூரில் மென்பொருள் எழுதும் நண்பன்
5.டெக்ஸ்டைல்ஸ் படித்து விட்டு,மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணிபுரியும் நண்பன்
6.இன்னும் வேலைதேடிக்கொண்டிருக்கும் நண்பன்
7.எங்கள் வரவேற்பினால் கண்கலங்கிய எங்கள் துறைத்தலைவர்
8.எங்களை விட இளமையாக இருந்த எங்கள் ஆசிரியர்கள்
9.கீரியும்,பாம்புமாக இருந்த நண்பர்கள் கொஞ்சி குலாவியது

இன்னும் பல ஆச்சர்யங்கள்!!வீடு,அலுவல் எனஅனைத்தையும் மறந்து சந்தோஷமாக இருந்த நாளது..

இச்சந்திப்பிற்கு பிறகு தொடர்புகள் புதுப்பிக்கபடுகின்றன..மெயில்பாக்ஸ்கள் நிரம்பி வழிகின்றன..நிறைய குறுஞ்செய்திகள்,கைப்பேசியில்..இச்சந்திப்பை ஒருங்கிணைத்தவன் என்ற முறையில், அளப்பறியா மகிழ்ச்சி எனக்கு..


மீண்டும் 2010ல் சந்திப்பதாக முடிவு செய்துள்ளோம்.