
சில நாய்கள்
வேளைகெட்ட வேளைகளில் உறங்கும்
சில நாய்கள்
பளுக் என கக்கி
அக்கக்கலை
அதி சுவாரஸியமாய் நக்கி உண்ணும்
சில நாய்கள்
புட்டிப் புண்களை ஈக்கள் லபக்காக்க
முக்கி முதுகு வளைத்து
வாய்க்கு எட்டாது நகர்ந்தோடும்
புட்டியின் ஜாலம் புரியாது சரியும்.
சில நாய்கள்
இருந்த இருப்பில்
கத்த தொடங்கி
நிறுத்த தெரியாமல்
அக்கத்தலில்
மாட்டிக் கொண்டு சுழலும்
கொடும் வெயிலில்
சில நாய்கள்
பெண்துவாரம் தேடி அலைந்து
ஏமாந்து
பள்ளி சிறுவர்களை விரட்டும்
இவ்வாறு
இவ்வாறு
இவ்வுலகில்
நான் கண்ட நாய்களில் சீலங்கள்
வாலுக்கு ஒருவிதம்
என்றாலும்
உண்ணும் உணவில் குறுக்கிட்டால்
பட்டென்று பிடுங்குவதில்
இவையெல்லாம்
நாய்கள்
xxxxxxxxxxxxxxxxx
சுந்தர ராமசாமி (பசுவய்யா) அவர்களின் படைப்புகளில் என்னை கவர்ந்த சில வரிகள் மேலே..எப்போதோ படித்தது..மீள் வாசிப்பில்,சட்டென கதவு திறந்தது போன்ற வெளிச்சம்..குறிப்பாக, கடைசி இரண்டு வரிகளில்..