Monday, August 02, 2010

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொறு நாளே - மறு வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன்.. என் வாசிப்பில், இவ்வளவு பாய்ச்சலான நடையை எந்த நாவலிலும் கண்டதில்லை..

எல்லாம் தெரிந்த ஆனால் ஒன்றுமே இல்லாத ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையினை பல சம்பவங்கள்,கதாபாத்திரங்கள் மூலம் நகர்த்தி செல்லும் நாவல்..கந்தனின் கதாபாத்திரம் நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் பலமானவை.. கந்தன் வாழ்வு குறித்து கொண்டுள்ள புரிதல்,அவனது ஆளுமை, தர்க்கரீதியான சிந்தனையோட்டம் ஆகியவற்றை மிகச்சிறப்பாக நாகராஜன் சம்பவங்களினூடே விவரித்து செல்கிறார்..

முடிந்தால், முழு வாசிப்பும் முடிந்தவுடன் இங்கு பதிவிடுகிறேன்..