Monday, August 02, 2010

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொறு நாளே - மறு வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன்.. என் வாசிப்பில், இவ்வளவு பாய்ச்சலான நடையை எந்த நாவலிலும் கண்டதில்லை..

எல்லாம் தெரிந்த ஆனால் ஒன்றுமே இல்லாத ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையினை பல சம்பவங்கள்,கதாபாத்திரங்கள் மூலம் நகர்த்தி செல்லும் நாவல்..கந்தனின் கதாபாத்திரம் நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் பலமானவை.. கந்தன் வாழ்வு குறித்து கொண்டுள்ள புரிதல்,அவனது ஆளுமை, தர்க்கரீதியான சிந்தனையோட்டம் ஆகியவற்றை மிகச்சிறப்பாக நாகராஜன் சம்பவங்களினூடே விவரித்து செல்கிறார்..

முடிந்தால், முழு வாசிப்பும் முடிந்தவுடன் இங்கு பதிவிடுகிறேன்..

Tuesday, July 20, 2010

பட்டென்று பிடுங்குவதில் இவையெல்லாம் நாய்கள்!!




சில நாய்கள்

வேளைகெட்ட வேளைகளில் உறங்கும்

சில நாய்கள்

பளுக் என கக்கி

அக்கக்கலை

அதி சுவாரஸியமாய் நக்கி உண்ணும்

சில நாய்கள்

புட்டிப் புண்களை ஈக்கள் லபக்காக்க

முக்கி முதுகு வளைத்து

வாய்க்கு எட்டாது நகர்ந்தோடும்

புட்டியின் ஜாலம் புரியாது சரியும்.

சில நாய்கள்

இருந்த இருப்பில்

கத்த தொடங்கி

நிறுத்த தெரியாமல்

அக்கத்தலில்

மாட்டிக் கொண்டு சுழலும்

கொடும் வெயிலில்

சில நாய்கள்

பெண்துவாரம் தேடி அலைந்து

ஏமாந்து

பள்ளி சிறுவர்களை விரட்டும்

இவ்வாறு

இவ்வாறு

இவ்வுலகில்

நான் கண்ட நாய்களில் சீலங்கள்

வாலுக்கு ஒருவிதம்

என்றாலும்

உண்ணும் உணவில் குறுக்கிட்டால்

பட்டென்று பிடுங்குவதில்

இவையெல்லாம்

நாய்கள்

xxxxxxxxxxxxxxxxx

சுந்தர ராமசாமி (பசுவய்யா) அவர்களின் படைப்புகளில் என்னை கவர்ந்த சில வரிகள் மேலே..எப்போதோ படித்தது..மீள் வாசிப்பில்,சட்டென கதவு திறந்தது போன்ற வெளிச்சம்..குறிப்பாக, கடைசி இரண்டு வரிகளில்..

Sunday, July 18, 2010

மீண்டும் நகுலன்!

வாசிப்பின் ஆரம்ப கட்டங்களில் ஒருநாள் முதல் முறை “ஜே ஜே சில குறிப்புகள்” படித்த பொழுது, ஒரு சில பக்கங்களை படித்த உடனேயே ஒரு வித மன அழுத்தம் ஏற்பட்டது.. அப்படி பல பக்கங்களில் கிடைத்த மன அழுத்தம், நகுலனின் கீழ்கண்ட மூன்று வரிகளில் கிடைத்தது.

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.


உண்மைதான், நினைவு சமயங்களில் எவ்வளவு கலவரத்தை உண்டு பண்ணுகிறது.

Saturday, July 17, 2010

அல் பசினோ - நடிகர்களின் நடிகன்!

என்னை பொறுத்த வரை, அல்பசினோ பேசும் எல்லா வசனமும் நல்ல வசனம்தான்..மனிதரின் குரல் அப்படி.. “ I'll make him an offer he can't refuse “ மறக்க கூடிய வசனமா இது... ஒரு சில வசனங்கள், ஒரு நடிகனின் வாழ்க்கையை தீர்மானிக்கும் விதம் அமைந்துவிடும்..அல்பசினோவுக்கு இந்த வசனமும் கிட்டதட்ட அதே மாதிரிதான்...

இந்த மகா நடிகனின் ஒரு மாஸ்டர் பீஸ் கீழே....perfect motivational speech.. அல்பசினோவின் குரலும், டயலாக் டெலிவரி்யும் அற்புதமாக இருக்கும்..

Saturday, July 10, 2010

அலுவலத்தில் ஒரு மாலை நேர உரையாடல்(அ) அக்கப்போர்

ஹலோ..குட் ஈவ்னிங் தங்கராஜ்..நம்ம வண்டி பீஸ் ஏத்த வந்துடுச்சா?

இல்லை சார் இன்னும் வரலையே..அதுக்குதான் வெயிட்டிங்..வந்துடுமா சார்..கொஞ்ச நேரத்துல ஷிப்ட் முடிஞ்சு டெஸ்பாட்ச் செக்சன் ஆளுங்க போயிட்டா, லோடு இன்னிக்கு பண்ண முடியாது...

அய்யய்யோ..இன்னிக்கு கண்டிப்பா டெலிவரி வேணும்..நாளைக்கு சேம்பிள் குரியர் பண்ணலைன்னா BUYER ஆப்படிச்சுடுவான்..

நான் என்ன சார் பண்ணட்டும்..வண்டி வந்தா ஏத்திடுவேன்..

லைன்லயே இருங்க தங்கராஜ்..டெஸ்பாட்ச் செக்சன்ல வண்டி எப்ப கிளம்புச்சுன்னு கேட்கறேன்..

(இண்டர்காமில்) ஹலோ ! ஈரோட்டுக்கு வண்டி எப்பண்ணே கிளம்புச்சு?

சார், மூணு மூணரை இருக்கும்..

அப்ப அஞ்சு அஞ்சரைக்கு போயிரக்கணுமே..ஏழு மணி ஆச்சு..இன்னும் போகலையாம்..எந்த வண்டிண்ணே அனுப்புனீங்க..

ரெகுலர் வண்டி வேற லோடுக்கு போயிடுச்சுன்னு புது வண்டி அனுப்புனாங்க சார்..கிளம்புறப்பவே அந்தாளு கொஞ்சம் டவுட்டாதான் சார் அட்ரஸ் கேட்டார்..

இப்ப நல்லா சொல்லுங்க விளக்கம்..அப்பவே இந்த டவுட்டு எழவை என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே..லைன்ல இருங்க....

தங்கராஜ்..நீங்க வைங்க..நான் இப்ப வண்டி டிரைவர்கிட்ட பேசிட்டு கூப்பிடறேன்..

அண்ணே, வண்டி நம்பர் சொல்லுங்க..

ஒரு நிமிசம் சார்.. சார் .. TN 45

யோவ்..வெறியேத்தாத...மொபைல் நம்பரை சொல்லுயா..

சாரி சார்..989xxxxxxxx

வைங்க..நான் அவனை கூப்பிடறேன்...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஹலோ..டிரைவரா...

ஆமாம் சார்...

______ கம்பெனிலருந்து பேசறேன்...எங்க போயிட்டு இருக்கீங்க...

சார்,பக்கத்துல போயிட்டேன்..இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்..

ஏம்பா உன்னை இங்க இருந்து அனுப்பி மூணரை மணி நேரம் ஆகுது,..ஏம்ப்பா லேட்டு...

சார், நிக்காம போய்க்கிட்டேதான் இருக்கேன்...பத்து பேரை வைச்சு வண்டியை பின்னாடி இருந்து தள்ளவா முடியும்...

அகராதிக்கெல்லாம் குறைச்சல் இல்லை...அங்க ஒண்ணும் என் மாமனார் வீட்டுக்கு நீ பொகலை...இன்னும் பத்து நிமிசத்துல அங்க இல்லைன்னா லோடு ஏத்த மாட்டானுங்க,பார்த்துக்க..வாடகை வாங்க மாட்ட..

டென்சன் ஆகாதிங்க சார்...போயிடுவேன்,..

வை...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஹலோ..தங்கராஜ்,எவனோ ஒரு நம்மளை விட பெரிய அகராதியை தேடிப் பிடிச்சு நம்ம பசங்க அனுப்பிருக்கானுங்க..மூணரை மணி நேரமா வந்துகிட்டு இருக்கான்..அஞ்சு நிமிசத்துல வந்துடுவான்..பார்த்து லோடு பண்ணிடுங்க பாஸ்...

ok ok சார்..அனுப்பிடறேன்..

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஹலோ..டேய் தம்பி,பிரிண்ட் பீஸ் நைட்டு வர லேட்டாகும்..எந்நேரம் ஆனாலும் இருந்து எடுத்துட்டு போய் சாம்பிள் தைக்க குடுத்துடு..நாளைக்கு குரியர் பண்ணனும்..கூட இருந்து measurements செக் பண்ணிக்கோ..அப்புறம் குரியர் டைம்ல வந்து முதுகுக்கு பின்னாடி நின்னுட்டு, அண்ணே, சாம்பிள் ஊத்திக்குச்சுன்னு சொன்ன, சங்குதான் பார்த்துக்க..

சரிண்ணே...பார்த்துக்கிறேன்..

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஹலோ..

ம்ம்ம்

என்னங்க...

ம்ம்ம்ம்..சொல்லு

வரப்ப சமோசா வாங்கிட்டு வரீங்களா..

ஸ்ஸ்ஸ்ஸ்....முடியலை...