Monday, August 26, 2013

பின் நகர்ந்த காலம் - வண்ண நிலவன்

1949ல் பிறந்த வண்ணநிலவன் தனது முதல் சிறுகதையை 19வது வயதில் எழுதுகிறார்.அதற்கு பிறகான இரண்டு,மூன்று வருடங்களில், வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, விக்ரமாதித்யன்,கி.ரா, பா.செயப்பிரகாசம்,தஞ்சை பிரகாஷ் என பல இலக்கிய ஆளுமைகளிடம் பரிச்சயமும்,நட்பும் கொள்கிறார்.

கோர்ட்டில் குமாஸ்தாவாக பணியாற்றிக் கொண்டே இலக்கிய தாகத்துக்கும் தீனி போடுகிறார்.கடும் வறுமையினால் சூழ்ந்த லெளகீக வாழ்வு அலைக்கழித்தாலும்,இலக்கியம் அவரை உத்வேகத்துடன் செலுத்திக் கொண்டிருக்கிறது.. வண்ணதாசனும், வல்லிக்கண்ணனும்,விக்ரமாதித்யனும் பெரும் ஆறுதலாய் இருக்கிறார்கள் (வண்ணதாசனிடம் இருந்து மட்டும் கிட்டதட்ட அறுநூறு கடிதங்கள் வாழ்நாளில் பெற்றிருக்கிறார்).  கிட்டதட்ட மூன்று வருடங்களில்,மேலே சொன்ன ஆளுமைகளிடம் இருந்த முக்கியமான அனைத்து புத்தகங்களையும் படித்து முடிக்குமளவு இலக்கியம் அவரை ஆட்கொண்டிருக்கிறது..

தனது 24வது வயதில், 1973ல் ஒரு கைப்பையில் வண்ணதாசன் கொடுத்த இரண்டு சட்டை மற்றும் இவரிடமுள்ள இரண்டு வேஷ்டிகளை மட்டும் திணித்துக் கொண்டு, சட்டைப் பையில் வெறும் 31 ரூபாயுடன் சென்னைக்கு ரயிலேறுகிறார்..சென்னைக்கு ரயில் கட்டணம் அப்போது 16.. கடல்புரத்தில் எழுத்து பிரதியாக அவர் கையில் இருக்கிறது..பதிப்புக்கு போகவில்லை..

இதுவரை படித்துள்ள “பின் நகர்ந்த காலம்” புத்தகத்திலிருந்து.

சினிமாவாக இருந்தால், இதற்கப்புறம் வசந்தம் வீசி, வாழ்வில் பெரும் வெற்றி பெற்றிருப்பான் ஒரு கலைஞன்..ஆனால், யதார்த்தம் வேறல்லவா..

இலக்கியம் படைப்பாளியை அவனது கடைசி காலம் வரை வறுமையிலேயேதான் உழல வைக்குமென்றால் அந்த எழவு இலக்கியமே தேவையில்லை என நினைக்கிறேன்..ஒரே அமர்வில் படிக்கக் கூடிய அளவில், எழுத்து நடையில் உள்ள புத்தகம்தான் என்றாலும், என்னால் ஒவ்வொரு அத்தியாத்தையும் அவ்வளவு எளிதாக கடனேவென்று படித்து விட்டு தாண்ட முடியவில்லை :(

1 comment:

Yaathoramani.blogspot.com said...

இன்னும் படிக்கவில்லை
படிக்கணும்
கூழும் மீசையும் எப்போதுமே
எதிர் நிலைகளைத்தான் எடுத்துக்கொள்கின்றன
அதில்தான் சுவாரஸ்யம் இருப்பது போலவும் படுகிறது

Post a Comment