Friday, January 03, 2014

கல்லூரி நாளொன்றின் டைரிக்குறிப்பு!

1995-ம் வருட கோடைக்கால கல்லூரி நாளொன்றின் டைரிக்குறிப்பு :)

இன்னைக்கு PFM  டெஸ்ட்.ஒரு பக்கம் கூட படிக்கலை. நேத்து அந்த நாயோட போயிருக்க கூடாது. YFM டெஸ்ட் முடிச்சுட்டு மத்தியானம் 1.00 மணிக்கு பஸ்ஸ்டாப் வந்தா சிவில் டிபார்ட்மெண்ட் லஷ்மியும், திவ்யாவும் கேப்ரியேல் க்ரூப்போட கடலை போட்டுட்டு இருந்தாங்க..எக்ஸாம் வேற நல்லா எழுதாத கடுப்புல, இதைப்பார்த்த உடனே சுர்ருன்னு கடுப்பாகிடுச்சு..வழக்கமா அந்த நேரத்துக்கு தம் போட மாட்டேன்..இதை பார்த்த உடனே அக்கா கடைக்கு போய் ஒரு கிங்ஸ் இழுத்துட்டு வந்து நின்னா, தலைவலி ஆரம்பிச்சுடுச்சு.எப்படித்தான், வெயில் பொளக்கற இந்நேரத்துக்கு கூட தக்காளி காரியத்துல கண்ணா இருக்கானுங்களோ..நம்ம கிளாஸ்லயும்தான் இருக்கே ரெண்டு..ஒண்ணை பார்த்தா நாம ஓடணும்..இன்னொருத்தி நம்மளை பார்த்தா ஓடறா..

சதாஸ் பஸ் பிடிச்சு பஸ்ஸ்டாண்ட் வந்து இறங்கறப்ப தலைவலி அதிகமாகி ஒரு அனாசின்-500 வாங்கிப் போட்டப்பத்தான் சாரதி வந்தான். டேய்! பங்காளி வாடா பீர் சாப்பிட போலாம்னான்..நான் வரலை பங்கு, பயங்கர தலைவலின்னேன்..ஏய் அதான் மாத்திரை போட்டீல்ல, சரியாய்டும்..சீனைப் போடாம வாடான்னு இழுத்துட்டு போயிட்டான்..எக்சாமும் சரியா பண்ணலை நாளைக்கு எக்சாமுக்கும் இன்னும் படிக்கலை, மதியம் பீர் கேக்குதான்னு மனசு உறுத்துச்சு..அப்புறம் டக்குன்னு மயிரே போச்சுன்னு தோணி அவன் கூட போய், மனோகரால ஒரு புஃல் பீர் அப்புறம் ஒரு ஆஃப் பீர்ன்னு அடிச்சு முடிக்கறப்ப நல்லாவே தெரிஞ்சது, எனக்கு ஏறிடுச்சுன்னு. மத்தியானத்துல எல்லாம் சரக்கு சாப்பிட்டதே இல்லை. அந்த இட்த்தோட நாத்தமே பொரட்டுச்சு..ஆனாலும், ரெண்டு புரோட்டா பிசைஞ்சு அடிச்சுருந்தேன். பில் செட்டில் பண்றப்ப, சர்வர்கிட்ட சாரதி வம்பிழுத்துட்டிருந்தான்..

நான் சொல்லாம, கொள்ளாம வெளியே வந்து நின்னு, 2ம் நம்பர் பஸ் வருதான்னு பார்த்தேன்..அப்பத்தான், 1st year சுப்பிரமணி சைக்கிள் ஸ்டேண்ட்ல இருந்து வெளியே சைக்கிள் எடுத்துட்டு வந்தான்..டேய் தம்பி நானும் வரேன்டா இருன்னேன்..அண்ணே! வெயில்ல டபுள்ஸ் எப்படி இவ்வளவு தூரம்னான்..மூடிட்டு ஓட்டு..கொஞ்ச தூரம் கழிச்சு நான் ஓட்டறேன்னு சொல்லிட்டு பின்னாடி  ரெண்டு பக்கம் கால் போட்டு, நானும் பெடல் போட்டேன். மிதிச்சேனா இல்லையா, எப்ப வீட்டுக்கு வந்தேன்னே தெரியலை..

பின்னாடி தோட்டத்துல போய், வாந்தி மேல வாந்தி..தலை செம பாரம்..அப்படியே வாஷ் பண்ணிட்டு வீட்டுக்குள்ள வந்தா யாரையும் காணோம்..நேரா போய் பெட்ல விழுந்து தூங்கிட்டேன்.

No comments:

Post a Comment